ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

பெங்களூரு திருவள்ளுவர் சிலையைப் பாதுகாக்கும் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார்

பெங்களூரு: பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும், அதே பகுதியில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்க கட்டடத்திற்கும் மிக பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான போலீஸார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவள்ளுவர் சிலை உள்ள பூங்காவிலும், தமிழ்ச் சங்க கட்டடம் அருகிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதரடிப்படை கவச வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக நேற்று வெடித்த மிகப் பெரிய வன்முறையால் பெங்களூரே போர்க்களமானது. கன்னட அமைப்பினர் தமிழகத்தை சேர்ந்த பஸ், லாரி, கார்களை தீ வைத்து கொளுத்தினர். இதனால் பெங்களூருவில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அல்சூரில் திருவள்ளுர் சிலை அமைந்துள்ள பூங்காவை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் அதே பகுதியில் உள்ள தமிழ்ச் சங்க கட்டிடத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடாதபடி பெங்களூரு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Heavy security cover to Thiruvalluvar statue in Bangaluru

பெங்களூரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்ரீத் கொண்டாட்டம்....

பெங்களூரு: வன்முறை தலைவிரித்தாடிய பெங்களூரில் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்த புதிய உத்தரவைத் தொடர்ந்து பெங்களூரில் பெரும் கலவரம் வெடித்தது. தமிழர்களின் வானகங்கள், வர்த்தக நிறுவனங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடந்தேறின. 

இதையடுத்து பெங்களூரில் 16 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும், பிற பகுதிகளில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. இன்று பெங்களூரு மிகவும் அமைதியாக காணப்படுகிறது. அதேசமயம் பதட்டம் குறையவில்லை. ஊரே நிசப்தமாக உள்ளது. மிக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும், புற ராணுவப் படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தாங்கள் காவலுக்கு இருப்பதாகவும் பெங்களூரு போலீஸார் கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்று பெங்களூரு நகரில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. தொழுகைக்குப் பின்னர் அனைவரும் வீடுகளுக்குப் போகுமாறும், வெளியில் சுற்ற வேண்டாம் என்றும் மத குருமார்கள் தொழுகைக்கு வந்தவர்களுக்கு அறிவுறுத்தினர்.

Bakrid celebrated in Bangaluru amidst heavy security

மக்கள் கொந்தளிச்சா.. கர்நாடக வாதத்தை தூக்கி குப்பையில் போட்ட சுப்ரீம் கோர்ட்

டெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்குமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடத்தப்பட்டது. சில விவசாயிகள் காவிரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். போராட்டத்தின்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில போராட்டக்காரர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டனர். இதையெல்லாம் காரணமாக காட்டி, மக்கள் கொந்தளிப்பதால் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என்று கர்நாடகா வாதம் முன் வைத்தது. இதைத்தான் செல்லாது.. செல்லாது என கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட். தமிழகத்திற்கு தண்ணீரை நிறுத்திவிட்டு முதல்வர் பதவியை உதறுகிறார் சித்தராமையா? பரபரப்பு தகவல் பெங்களூரை 365-வது பிரிவின் கீழ் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்: ராமதாஸ் காவிரி பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசு தலையிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் #cauvery Featured Posts தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, 6-ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வழக்கறிஞர்கள் ரகுபதி, மோகன் கத்தார்கி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் வீட்டுக்கு சென்று அவரிடம் ஒரு மனுவை அளித்தனர். உடனே விசாரிக்க கோரிக்கை அந்த மனுவில் 5-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக, ஞாயிற்றுக்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மீண்டும் வலியுறுத்தல் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் நேற்று காலை பதிவாளரை சந்தித்து, திருத்தம் கோரும் மனுவை நேற்றே விசாரணைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து நேற்று மாலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இன்று விசாரணை இதன்படி திருத்தம் கோரும் கர்நாடகாவின் மனுவை இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் கர்நாடகா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. நீதிபதிகள் கூறியது: மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பதையெல்லாம் காரணமாக வைத்து காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூற முடியாது. இதெல்லாம் கோர்ட்டில் செல்லாது. உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், சட்டம்-ஒழுங்கை தங்கள் கைகளில் எடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறு நீதிபதிகள் சரமாரியாக கர்நாடகா தரப்பை கண்டித்தனர். காவிரியில் தண்ணீர் திறக்குமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடத்தப்பட்டது. சில விவசாயிகள் காவிரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். போராட்டத்தின்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில போராட்டக்காரர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டனர். இதையெல்லாம் காரணமாக காட்டி, மக்கள் கொந்தளிப்பதால் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என்று கர்நாடகா வாதம் முன் வைத்தது. இதைத்தான் செல்லாது.. செல்லாது என கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட்
You cannot take the ground of public agitation, SC says Karnataka

பந்துக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை.. பல்டி அடித்த வாட்டாள் நாகராஜ்!

பெங்களூரு: பெங்களூரில் நாளை பந்த் நடத்த பல்வேறு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தான் பந்த் நடத்த அழைப்பு விடுக்கவில்லை என்று கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் மறுத்துள்ளார். நேற்று பெங்களூரில் ஆடித் தீர்த்து விட்ட வெறியாட்டத்தால் தமிழர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக பெரும் பொருள் இழப்பை தமிழர்களுக்கு கன்னட வன்முறையாளர்கள் ஏற்படுத்தி விட்டனர். நகரையே தங்களது வன்முறை வெறியாட்டத்தால் துவம்சம் செய்து விட்டது இந்தக் கும்பல். திட்டமிட்ட வன்முறை வெறியாட்டமாக இது இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று விதான் சவுதாவை தனது கட்சியினருடன் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திக் கைதானார் வாட்டாள் நாகராஜ். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் நாளை பெங்களூரில் பந்த் நடத்த பல்வேறு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் பந்த்துக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை என்று வாட்டாள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வாட்டாள் கூறுகையில், நான் பந்த் நடத்த அழைப்பு விடுக்கவில்லை. செப்டம்பர் 15ம் தேதி ரயில் மறியல் செய்ய மட்டுமே அழைப்பு விடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தாலும் கூட இன்றே பெங்களூரில் பந்த் போலத்தான் காணப்படுகிறது. ஒரு கடையும் திறக்கப்படவில்லை. பஸ்கள் ஓடவில்லை. மக்கள் பெரும் பீதியுடன்தான் உள்ளனர். தமிழர்கள் வெளியில் வரவே அஞ்சும் நிலைதான் தொடர்கிறது.

Vatal Nagraj says he has not called for bandh tomorrow

இன்று கர்நாடக பந்த்... யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் நடத்தவுள்ள பந்த் போராட்டத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மக்கள் அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வர வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது கர்நாடகத்தில் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கன்னட அமைப்புகள் பலவும் இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளன. போராட்டங்களில் குதித்துள்ளன. இதில் வன்முறையும் தலை தூக்கியுள்ளது. இந்த நிலையில் இன்று கர்நாடகம் முழுவதும் மாநிலம் தழுவிய அளவில் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து விரிவான பாதுகாப்புக்கு கர்நாடக போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். முழு அளவில் பந்த் கர்நாடகத்தில் இந்த பந்த் முழு அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், பயம், அச்சம் காரணமாகவே பாதிப் பேர் கடை, வர்த்தக நிறுவனங்களை மூடி விடுவார்கள். தனியார் பள்ளிகள் நாளை முழமையாக இயங்காது. பொதுப் போக்குவரத்தும் அடியோடு பாதிக்கப்படும் என்றே தெரிகிறது. தமிழ்ப் படம் கிடையாது.. சேனலும் தெரியாது ஏற்கனவே கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் டிவி சேனல்கள் தெரியவில்லை. நிறுத்தி விட்டனர். தியேட்டர்களிலும் தமிழ்ப் படங்களைத் தூக்கி விட்டனர். நாளை தியேட்டர்களும் மூடப்படுகின்றன. ஒரு படமும் ஓடாது என்று திரைப்பட அமைப்புகள் அறிவித்துள்ளன. புதிய கன்னடப் படங்களை வெளியிடுவதையும் சனிக்கிழமைக்குத் தள்ளி வைத்துள்ளனர். மைசூரு சாலையை தவிர்க்க வேண்டும் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம், அதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஓசூர் சாலையிலும் நாளை ஒரு வாகனமும் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடாது என்று ஏற்கனவே அறிவித்து விட்டனர். காவிரி கலவரம்... அமைதி காக்க வேண்டும்... வெங்கையா நாயுடு வலியுறுத்தல் தமிழர்களைக் காக்க இரவு பகலாக செயல்படும் கர்நாடக தமிழ்ச் சங்கங்கள் #cauvery நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி மகன் வீடுகளில் 2வது நாளாக வருவமான வரி சோதனை- ஆவணங்கள் சிக்கின Featured Posts அரசு மறைமுக ஆதரவு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை கொடுத்து விட்டனர். அதேசமயம், அரசு பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்குமா அல்லது விடுமுறையா என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. பந்த்துக்கு அரசு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. எனவே கர்நாடக அரசு பந்த்தை ஆதரிக்க முடியாது. இருப்பினும் மறைமுகமாக பந்த்துக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு ஆதரவு தருவதாக கூறப்படுகிறது. எனவே நாளை அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வராவிட்டாலும் கூட அரசு கண்டு கொள்ளாது என்றே கருதப்படுகிறது. வட கர்நாடகத்தில் ஆதரவு இருக்காது பந்த் முழு அளவில் இருக்கும் என்றாலும் கூட வழக்கம் போல வட கர்நாடகாவில் பந்த் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டனா, ராம்நகர், சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் போலீஸ் குவிப்பு பெங்களூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு விதான சவுதா முன்பு அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் கர்நாடக காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

மைசூரில் தமிழ் நடிகர்கள் தங்கியருந்த லலிதா மஹால் பேலஸ் ஹோட்டலில் தாக்குதல்

மைசூரு: மைசூரில் தமிழ் நடிகர், நடிகையர் தங்கியிருந்த ஹோட்டலில் கன்னட போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீஸார் விரைந்துள்ளனர். மைசூரில் உள்ள லலிதா மஹால் பேலஸ் ஹோட்டலில் ஒரு தமிழ்த் திரைப்படப் படக்குழுவினர் தங்கியிருந்தனர். படப்பிடிப்புக்காக அவர்கள் வந்திருந்தனர். லலிதா பேலஸ் ஹோட்டலில்தான் பல்வேறு தமிழ் நடிகர், நடிகையரும் தங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென அந்த ஹோட்டலை வன்முறைக் கும்பல் முற்றுகையிட்டது. ஹோட்டல் பாதுகாவலர்களை அடித்துத் தள்ளி விட்டு உள்ளே புகுந்த அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்து விட்டதாகவும், நடிகர், நடிகையர் தமிழ்நாட்டுக்குத் திரும்பப் போவதாகும் கூறி ஹோட்டல் நிர்வாகம், வன்முறையாளர்களை சமாதானப்படுத்த முயற்சித்தது. போலீஸாருக்கும் தகவல் போய் அவர்களும் விரைந்து வந்தனர். இந்த சம்பவத்தால் மைசூரில் பரபரப்பு ஏற்பட்டது. காவிரிப் பிரச்சினையில் மைசூரு, மண்டியா ஆகிய நகரங்களில் தொடர்ந்து தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சனி, 10 செப்டம்பர், 2016

அமெரிக்க நிறுவனங்களின் திடீர் முடிவால் டிசிஎஸ், இன்போசிஸ்-க்கு ரூ.40,000 கோடி இழப்பு..!

மும்பை: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான 'டிசிஎஸ்' மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் துவங்கி 2 மணிநேரத்தில் 6 சதவீதம் சரிந்து 6 மாத சரிவை அடைந்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் சுமார் 40,000 கோடி ரூபாயை இழந்துள்ளது. இந்தப் பெரும் இழப்பில் டிசிஎஸ் நிறுவனத்திற்குத் தான் அதிகளவிலான மதிப்பு..! எல்லாவற்றுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் எடுத்த ஒரே முடிவுதான் காரணமாக அமைந்துள்ளது. என்ன முடிவு..? டிசிஎஸ்1/12 டிசிஎஸ் இந்திய பங்குச்சந்தையில் அதிகச் சந்தை முதலீட்டு கொண்டுள்ள நிறுவனங்களில் டிசிஎஸ் முதலிடம், அதுமட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் 55 சதவீத வருவாய் மற்றும் லாபத்தைத் தனது மென்பொருள் வர்த்தகத்தின் வாயிலான பெறுகிறது. அதாவது டிசிஎஸ் நிறுவனத்தின் வாயிலாகப் பெறுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது.   ஆன்லைனில் அனைத்து வகையான இன்ஸ்யூரன்ஸ் வாங்க/புதுப்பிக்க

டாப் ஹீரோக்களின் சம்பள ஸ்டேட்டஸ்... லைக்ஸ், டிஸ்லைக்ஸ்!

அடடா... என ஆச்சர்யப்பட வைத்தது நம்ம ஹீரோக்களின் சம்பள பட்டியல். ஆமாம் பாஸ்... மார்க்கெட் வேல்யூவுக்கு இணங்க சம்பளத்தையும் குறைத்திருக்கிறார்கள். ஆனால் மார்க்கெட் இருக்கும் ஹீரோக்கள் பல மடங்கு ஏற்றியிருக்கிறார்கள்.
நம்ம பேவரைட் ஹீரோக்களின் சம்பளம், மார்க்கெட் வேல்யூ, என்ன பலம், பலவீனம் என்பதை கோடம்பாக்க சந்துபொந்துகளில் அலைந்து ஆராய்ந்தோம். பெருமூச்சு விட்டபடியே படித்துக்கொள்ளுங்கள்.
ரஜினி எத்தனை விஜய்கள், அஜீத்கள், சிவகார்த்திகேயன்கள் வந்தாலும் அன்றும் இன்றும் என்றுமே சூப்பர் ஸ்டார் நம்ம ரஜினிதான். கபாலி படத்துக்கு ரஜினி 70 கோடி வாங்கியதாகச் சொல்கிறார்கள். எந்திரன் 2 சம்பளம் நூறைத் தாண்டலாம். முன்பெல்லாம் படத்தின் லாபத்தில் ஒரு பங்கு ரஜினிக்கு போய்விடும். ஆனால் ஏன் ரிஸ்க் என்று சம்பளமாகவே வாங்கிகொள்கிறார். லைக் - ஸ்டைல், மேன்லி லுக், உலகளவில் வற்றாத ரசிகர் வெள்ளம் டிஸ்லைக் - குடும்பம், கமிட்மெண்டுக்குள் சிக்கி கொள்வது.

கமல் ஹாஸன் கமல்ஹாசன் படங்கள் எல்லாமே அவரது சொந்த தயாரிப்புதான். கமர்ஷியலாக அவரது மார்க்கெட் பெரிதாக இல்லைதான். வெளிப் படங்கள் என்றாலும் கமல் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் படத்தை முடித்து கொடுப்பார். தனது சம்பளமாக 40 கோடி வரை அதில் குறித்துக்கொள்வார் என்கிறார்கள். லைக் - வெரைட்டியாக படங்கள் தருவது டிஸ்லைக் - கமர்ஷியல் ஃபார்முலா பிடிபடாதது  

அஜித் ரஜினி, கமலுக்கு அடுத்து அஜித். எத்தனை தோல்வி தந்தாலும் ஓப்பனிங் கிங் என்றுமே அஜித் தான். காரணம் அவ(ர்)ரை நம்பும் ரசிகர்கள். முதல் மூன்று நாட்களின் வசூல் தான் தமிழ் சினிமாவையே நிர்ணயிப்பதால் அஜித் தான் இப்போதைக்கு வசூல் சக்ரவர்த்தி. சம்பள விஷயத்தில் இவரது ஃபார்முலாவை எல்லா ஹீரோக்களும் கடைபிடித்தால் நல்லது என்று கோலிவுட்டில் பேச்சு ஓடுகிறது. பாலிவுட் ஸ்டைலில் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு நடிக்கிறார். படம் முடிந்து நடக்கும் வியாபாரத்தை பொறுத்து ஷேர் வாங்கிகொள்கிறார். இதனால் தயாரிப்பாளருக்கு பெரிய நெருக்கடி குறைகிறது. லைக் - இமேஜ், ஸ்க்ரீன் அப்பியரன்ஸ், ரசிகர்கள் டிஸ்லைக் - புரமோஷன்களுக்கு வர மறுப்பது, வெரைட்டியான படங்களை தவிர்த்து மாஸ் படங்களையே செலக்ட் செய்வது.  
விஜய் ஏ,பி,சி எந்த செண்டரிலும் கலெக்‌ஷன் அள்ளுவது விஜய் படம். துப்பாக்கி, கத்தி போல வலுவான திரைக்கதை கிடைத்தால் கோலிவுட்டுக்கே மகா கொண்டாட்டம். துப்பாக்கியில் 20 ஐத் தொட்ட சம்பளம் கத்தியில் 30 ஐ தொட்டுவிட்டது. ஆனால் தாணுவின் நட்புக்காக தெறி படத்துக்கு 25 கோடி தான் வாங்கியிருக்கிறார். லைக் - நல்ல ஸ்க்ரிப்ட் செலக்டர், டான்ஸ் டிஸ்லைக் - அவ்வப்போது எட்டிப்பார்க்கும் அரசியல் ஆசை, நடிப்பில் வெரைட்டி இல்லாதது.   சூர்யா சிங்கம் 2 தான் 2013 தான் மெகா ஹிட். ஆனால் அஞ்சானும், மாஸும் சூர்யாவின் மார்க்கெட்டுக்கு பின்னடைவுகள். 24 முதலுக்கு மோசமில்லாத படம். சிங்கம்3 இல் விட்டதைப் பிடித்துவிடுவார் என நம்புகிறார்கள். நாம் பார்த்த ஹீரோக்கள் அனைவரையும் விட அதிகம் சம்பாதிப்பவர் சூர்யா தான். சம்பளமாக 20 கோடியும் தெலுங்கு ரைட்ஸும் வாங்கிகொள்கிறார். எதிர்பார்ப்பைப் பொறுத்து தெலுங்கு ரைட்ஸ் எகிறும். லைக் - எல்லா படங்களையும் கலந்துகட்டி தருவது, பிரச்னைகளில் சிக்காதது. டிஸ்லைக் - அஜித், விஜய் அளவுக்கு ரசிகர் வட்டம் இல்லாமல் இருப்பது.   வாராகி கொலை மிரட்டல் விடுத்தார் யுவர் ஆனர்: ஹைகோர்ட்டில் விஷால் மனு இதை படிக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன்: ஆராத்யாவுக்கு அமிதாப் உருக்கமான கடிதம் 'சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சமமான மாஸ் கவுண்டமணிக்கு இருக்கு!' Featured Posts தனுஷ் தோல்வியடையும் படம் என்றாலும் அதில் தனுஷின் நடிப்பு பிரமாதமாக பேசப்படும். மைனஸான இதை ப்ளஸ் என நினைத்துகொள்வது தான் தனுஷ் செய்யும் தவறு. மார்க்கெட் ஏறி ஏறி இறங்குகிறது. சம்பளம் மாரி வரை 15 கோடி தான். அடுத்த படத்திலிருந்து 18 ஆக்க முடிவு செய்திருக்கிறார். லைக் - அபார நடிப்பு, கமர்ஷியலாக சிக்ஸர் அடிக்கும் படங்களை தேர்வு செய்தல். டிஸ்லைக் - ஓவர் பில்டப்களை வலுக்கட்டாயமாக படங்களில் சேர்ப்பது.     சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் இதுவரை தோல்வியே பார்க்காமல் பயணிக்கிறார். லேட்டாக வந்தாலும் ரஜினிமுருகன் வசூலில் குறை வைக்கவில்லை. அஜித், விஜய்க்கு நிகராக ஓப்பனிங்கும், ஃபேமிலி ஆடியன்ஸும் இருக்கிறது. காக்கி சட்டையில் 3 கோடியைத் தொட்ட சிவா சம்பளம் இப்போது பதினைந்தைத் தொட்டிருக்கிறதாம். லைக் - பிராமிஸிங் ஆக்டர். மாஸ் ஓப்பனிங். எண்டெர்டெய்னர் டிஸ்லைக் - காமெடி பாதையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது.   விக்ரம் இத்தனை வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் கூட விக்ரமின் மார்க்கெட் உடன் இணையும் இயக்குநர்களை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. காரணம் இடையில் சில தவறான படங்களைத் தேர்வு செய்ததுதான். பத்து எண்றதுக்குள்ள படத்தில் 20 கோடியைத் தொட்டுவிட்டார். ஐ ஹிட் அடித்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் ஹிட் ஆகாதது வருத்தமும் பின்னடைவும்தான். பத்து எண்றதுக்குள்ள படுதோல்வி அடைந்ததால் நாளை வெளியாகும் இருமுகன்தான் விக்ரமின் கேரியரை முடிவு பண்ணும். லைக் - கடின உழைப்பு டிஸ்லைக் - ஒரு படத்தில் இரண்டு, மூன்று ஆண்டுகள் என சிக்கி கொள்வது.   கார்த்தி அலெக்ஸ் பாண்டியனில் இருந்து வரிசையாக துரத்திய தோல்விகளை மெட்ராஸ், கொம்பன், தோழா மூலம் விரட்டியிருக்கிறார். 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். லைக் - காமெடி கலந்த நடிப்பு டிஸ்லைக் - கதை விஷயத்தில் அதிகம் தலையிடுவது. விஷால் ஆரம்பத்தில் ஹிட் அடித்து இடையில் சறுக்கியவர் பாண்டிய நாடு படத்துக்கு பிறகு அடித்து ஆடுகிறார். மார்க்கெட் வேல்யூ 20 கோடியைத் தொட்டிருக்கிறது. நல்ல கமர்ஷியல் இயக்குனர் இணையும்போது அதிகரிக்கும். போட்டி போட்டு பெரிய படங்களுடன் வெளியிட்டு ஆப்பை தேடி வாங்கிகொள்கிறார். சம்பளம் 8 கோடியாக அதிகரித்துள்ளது. லைக் - படங்களை சரியாக தேர்வு செய்வது டிஸ்லைக் - சங்க விவகாரத்தில் பலரையும் பகைத்துக்கொண்டது, தயாரிப்பாளர்களுடன் தொடர் மோதல்   சிம்பு நீண்ட நாள் கழித்து வந்த வாலு சிம்புவை தூக்கி விட்டது. இதுவரை 10 கோடியே தொடாத சிம்புவின் மார்க்கெட் 15 கோடியை தொட்டிருப்பது நல்ல முன்னேற்றம் இதை தக்க வைத்துக்கொள்வது சிம்புவின் பொறுப்பு. 4 கோடி வாங்கிகொண்டிருந்த சிம்புவின் சம்பளம் இப்போது 6 வரை உயரும் என்கிறார்கள். லைக் - ரசிகர்கள் வட்டம் டிஸ்லைக் - படங்கள் தாமதமாவது.   ஆர்யா சொந்த கம்பெனி ஆரம்பித்ததில் இருந்தே தோல்விகள் துரத்தியடிக்கிறது. வெளி கம்பெனிகளில் நடிக்கும் படங்கள் நன்றாக இருந்தாலும் புரமோஷன்களில் கோட்டையை விடுகிறார்கள். 5 கோடியைத் தொட்டிருக்கிறது சம்பளம். லைக் - நஷ்டத்தில் பங்கு போட்டு தயாரிப்பாளரை வாழவைப்பது. டிஸ்லைக் - சும்மாவே வந்து நின்று செல்வது. கொஞ்சம் நடிங்க பாஸ்!   விஜய் சேதுபதி சரசரவென ஏறிய கிராஃப் அதைவிட வேகமாக இறங்கியது. ஆனால் நானும் ரவுடிதான், சேதுபதி படங்கள் விஜய் சேதுபதியை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 லிஸ்டில் சேர்த்திருக்கிறது. 15 கோடி வரை இருந்த மார்க்கெட் இப்போது 10 - 12 வரை சரிந்திருக்கிறது. சம்பளம் நான்கு கோடி. இப்போது அட்வான்ஸ் கொடுத்தால் 2018இல் தான் கால்ஷீட் கிடைக்கும். அவ்ளோ பிஸி. லைக் - கதை செலக்‌ஷன் டிஸ்லைக் - இன்னும் ஒரு கமர்ஷியல் ஹிட் கூட கொடுக்காதது.  

சத்தமே இல்லாமல் சத்யராஜுக்கு ஜோடியான அமலாபால்!

சென்னை: நடிகை அமலாபால், சத்யராஜுக்கு ஜோடியாக முருகவேல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குநர் விஜயை காதல் திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால். திருமணத்திற்குப் பின் சில காலம் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியிருந்த அமலா பால், சமீபகாலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இதற்கிடையே விஜயும், அவரும் விவாவகரத்து வேண்டி நீதிமன்றத்தின் உதவியையும் நாடியுள்ளனர். மீண்டும் அமலா பால் நடிக்கத் தொடங்கியதால் தான் இந்தப் பிரிவு எனக் கூறப்படுகிறது. ஆனால், அடுத்த ரவுண்டுக்குத் தயாரான அமலாபாலுக்கு எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையவில்லை. இப்போதைக்கு தனுஷ் நடிப்பில் உருவாகும் 'வடசென்னை' படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். வேறு எந்த படத்திலும் அவரை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில், சத்தமே இல்லாமல் சத்யராஜுக்கு ஜோடியாக அமலாபால் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். 'முருகவேல்' எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

Amala Paul becomes Sathyaraj's pair

ரூ 45 கோடிக்குப் போன சிவகார்த்திகேயனின் ரெமோ... போட்ட பணம் வருமா?

தமிழ் சினிமாவில் எந்த புண்ணியவான் ஆரம்பித்து வைத்தாரோ தெரியவில்லை... இப்போதெல்லாம் படங்களின் வியாபாரம் அந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோவின் முந்தைய பட கலெக்‌ஷனை அடிப்படையாகக் கொண்டுதான் நடக்கிறது. இதனாலேயே நல்ல ஹிட் கொடுத்த ஹீரோ ஆல்ரெடி நடித்துக்கொண்டிருக்கும் ஏதாவது ஒரு சுமார் படம் மூலம் குப்புற விழுந்து கொள்கிறார். அவர் தப்பி எழுந்து வருவதற்கு படாதபாடு பட வேண்டும். முக்கியமாக வியாபார ஷோ எனப்படும் விநியோகஸ்தர்களுக்கான ஸ்பெஷல் ஷோ இப்போது கிடையவே கிடையாது. நாங்க சொல்றதுதான் ரேட்டு என்னும் அடாவடிதான் நடக்கிறது. அப்படித்தான் சிவகார்த்திகேயனின் ரெமோவும் 45 கோடிக்கு விலை போயிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ரஜினிமுருகன் அள்ளிய கலெக்‌ஷன்தான் இது. இதை வைத்து படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமை 45 கோடிக்கே போயிருக்கிறது. ரஜினிமுருகன் மெகா ஹிட் ஆக உடன் ரிலீஸான சுமாரான படங்களும் ஒரு காரணம். ஆனால் ரெமோ அப்படி அல்ல... ரெமோவுடன்தான் விஜய் சேதுபதியின் றெக்க, ஜீவாவின் கவலை வேண்டாம் ஆகியவையும் ரிலீஸ் ஆகின்றன. தாங்குவாரா சிவா?

Remo theatrical sold out for Rs 45 cr

வியாழன், 8 செப்டம்பர், 2016

லேடீஸ் ஹாஸ்டலில் பெண்கள் குளிப்பதைப் படம் பிடித்து ஆசைக்கு இணங்க மிரட்டிய அயோக்கியன் கைது! Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/fake-cbi-officer-nabbed-taping-women-s-bath-ladies-hostel-262235.html

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் பாத்ரூமில் கேமரா வைத்து பெண்கள் குளிப்பதைப் படம் பிடித்த நபரைப் போலீஸார் கைது செய்தனர். அவரது வீட்டில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கார்களில் பொருத்தப்படும் சிவப்பு குழல் விளக்குகள், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை சிக்கின. தன்னை சிபிஐ அதிகாரி என்று கூறி அவர் நாடகமாடியதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். உரிய முறையில் விசாரணை நடத்திய போது அவர் உண்மையைக் கக்கி விட்டார். இதையடுத்து போலீஸார் அந்த மோசடி ஆசாமியை கைது செய்துள்ளனர். லேடீஸ் ஹாஸ்டலில் நடந்த இந்த அக்கிரமச் செயலால் அங்கு தங்கியுள்ள பெண்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தக் கேமராவில் பதிவான காட்சிகளை கைதான நபர் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளாரா என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.