ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

புதுடில்லி: பல்வேறு குற்றம் புரிந்தது தொடர்பாக வளைகுடா நாட்டு சிறைகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 3 ஆயிரத்து 497 பேர் வாடி வருவதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி இந்த விவரத்தை தெரிவித்தார்.
அவையில் அவர் கூறியதாவது: வளைகுடா நாட்டு சிறைகளில் 3 ஆயிரத்து 497 பேரில் ஆயிரத்து 400 பேர் ஐக்கிய அரபு எமிரெட் ( ரியாத்) சிறையில் அதிகம் அடைப்பட்டுள்ளனர். 568 பேர் ஜெட்டாவிலும், 250 பேர் குவைத்திலும், 106 பேர் ஏமனிலும், கத்தார் மற்றும் பக்ரைனில் 178 பேரும் சிறையில் உள்ளனர். இவர்கள் பல்வேறு குற்றம் தொடர்பானவர்கள். குறிப்பாக விசா, போலி ஆவணங்கள், திருட்டுத்தனமாக நாட்டில் குடியேறுதல், இந்த தகவலை அந்நாட்டு இந்திய அமைப்பு அலுவலகம் தரப்பில் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

இவர்களை மீட்க நமது இந்திய அமைப்பு சார்பில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவான விசாரணை நடத்தி, முடிவுக்கு வழி வகுக்கவும் கோரியுள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

இவர்களை மீட்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி இல்லை என சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.
புதுடில்லி: பல்வேறு குற்றம் புரிந்தது தொடர்பாக வளைகுடா நாட்டு சிறைகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 3 ஆயிரத்து 497 பேர் வாடி வருவதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி இந்த விவரத்தை தெரிவித்தார்.
அவையில் அவர் கூறியதாவது: வளைகுடா நாட்டு சிறைகளில் 3 ஆயிரத்து 497 பேரில் ஆயிரத்து 400 பேர் ஐக்கிய அரபு எமிரெட் ( ரியாத்) சிறையில் அதிகம் அடைப்பட்டுள்ளனர். 568 பேர் ஜெட்டாவிலும், 250 பேர் குவைத்திலும், 106 பேர் ஏமனிலும், கத்தார் மற்றும் பக்ரைனில் 178 பேரும் சிறையில் உள்ளனர். இவர்கள் பல்வேறு குற்றம் தொடர்பானவர்கள். குறிப்பாக விசா, போலி ஆவணங்கள், திருட்டுத்தனமாக நாட்டில் குடியேறுதல், இந்த தகவலை அந்நாட்டு இந்திய அமைப்பு அலுவலகம் தரப்பில் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

இவர்களை மீட்க நமது இந்திய அமைப்பு சார்பில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவான விசாரணை நடத்தி, முடிவுக்கு வழி வகுக்கவும் கோரியுள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

இவர்களை மீட்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி இல்லை என சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக