ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மாநகரில் புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணி எப்போது துவங்கும்? எட்டு மாதங்களாக காத்திருப்போர் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25செப்
2014 
22:56
கோவை : கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் இயல்பு நிலைக்கு வந்துள்ள நிலையில், கடந்த எட்டு மாதங்களாக குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நிறுத்தி வைத்திருப்பதால், மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். எப்போது குடிநீர் இணைப்பு வழங்கும் பணி துவங்கும் என்பது தெரியாமல், மக்கள் அலைமோதுகின்றனர்.

கோவை மாநகராட்சியில், சிறுவாணி, பில்லுார், ஆழியாறு குடிநீர் திட்டங்கள் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, மூன்று குடிநீர் திட்டங்கள் மூலமும் திருப்திகரமாக குடிநீர் கிடைத்ததால், மாநகராட்சியின் காத்திருப்போர் பட்டியலில் இருந்த, 380 விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு தரப்பட்டது. அதன்பிறகு, குடிநீர் பற்றாக்குறையால், இணைப்பு தருவது நிறுத்தப்பட்டது. இந்தாண்டு பிப்., 13க்கு பிறகு, புதிய இணைப்பு தரப்படவில்லை. இதற்கிடையே, குடிநீர் இணைப்பில், பிளம்பர்கள், அதிகாரிகள் கைகோர்த்து தவறு செய்வதை தடுக்கவும், அனைத்து பிளம்பர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையிலும், கடந்த மாதம், 25ம் தேதி, குடிநீர் இணைப்புக்கு 'ஆன்-லைனில்' விண்ணப்பிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதில், சிரமங்கள் உள்ளதாலும், அதற்கான சாப்ட்வேர் பணி நிறைவடையாததாலும், தற்போது, மண்டல அலுவலகத்தில் மட்டுமே குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.மண்டல அலுவலகத்தில், 125 ரூபாய் கட்டணம் செலுத்தினால், ஆன்-லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை, 3280 பேர், குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும், 'எப்போது குடிநீர் இணைப்பு வழங்கப்படும்' என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலை யில், மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், குடி நீர் இணைப்பு வழங்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தேர்தல் முடிந்து புதிய மேயர் பொறுப்பேற்றுள்ள நிலையில், குடிநீர் இணைப்புக்காக விண்ணப்பித்தவர்கள், யாரை அணுக வேண்டும் என்று தெரியாமல், மாநகராட்சி அலுவலகத்தில் முட்டி மோதுகின்றனர்.

இணைப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டட உரிமையாளர்கள் கூறுகையில், 'மாநகராட்சி துவங்கியுள்ள 'ஆன்-லைன்' திட்டத்தால், இடைத்தரகர்கள் குறுக்கீடு இருக்காது என்பதால் வரவேற்கிறோம். பொதுமக்கள் அனைவருக்கும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க தெரியாது. வேறு ஒருவரை அணுகும் போது, இடைத்தரகர்கள் தலையீடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே சிரமமின்றி குடிநீர் இணைப்பு பெறுவதற்கு ஏற்ற வகையில், திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். அன்றாடம் காத்திருக்கும் நிலையை ஏற்படுத்தாமல், மாநகராட்சிக்கு அலைக்கழிக்காமல் அதிகாரிகள் திட்டமிட வேண்டும்' என்றனர்.

பிளம்பர்கள் அசோசியேஷன் நிர்வாகிகள் கூறுகையில், 'குடிநீர் இணைப்பு வழங்குவதில் நவீன தொழில்நுட்ப முறைகளை வரவேற்கிறோம். அந்தந்த பகுதி பிளம்பர்களுக்கு தான் குடிநீர் குழாய் மெயின் லைன் எங்கிருக்கிறது என்பது தெரியும். அந்தந்த பகுதி பிளம்பர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்க வேண்டும்' என்றனர்.
டில்லி பூங்காவை போல் வண்டலூரிலும் ஆபத்து?
செப்டம்பர் 25,2014
1
தாம்பரம் : டில்லி சம்பவத்தை தொடர்ந்து, வண்டலுார் பூங்காவின் பாதுகாப்பை பலப்படுத்தாததால், ஆபத்தான வகையில், கரடியை அலைபேசியில் படம் பிடிக்கும் செயல் தொடர்கிறது. டில்லி விலங்கியல் பூங்காவில், வெள்ளை புலி அடைத்து ...

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

Photo Gallery

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தோடு கூடிய புண்ணிய காலம் மாசி மகம் ஆகும். ஈசனுடன் ஏற்பட்ட ஊடல் காரணமாக பார்வதி தேவி பூமியில் பிறக்கும்படி நேர்ந்தது. காளிந்தி நதியில் இருந்த தாமரைப் பூ ஒன்றில் வலம்புரிச் சங்கு வடிவமாய் இருந்தாள் அம்பிகை. 

அப்போது தக்கன் தன் மனைவி வேதவல்லியோடு அங்கு நீராட வந்தான். அவனது பார்வையில் வலம்புரிச் சங்கு பட்டது. அதனை எடுத்தபோது, அது அழகிய பெண் குழந்தையாயிற்று. இறைவியே குழந்தையாய் வந்த இத்தினம் மாசி மகம் ஆகும். ஆதி காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கொடியவனாக இருந்தான். 

நாட்டு மக்கள் அவனால் மிகவும் துன்பங்களை அனுபவித்து வந்தனர். இதனை நாட்டின் குருவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அரசனை வெல்லும் பொருட்டு, அதற்கான உபாயத்தை கூறும் படி, ஒரு இரவு நேரத்தில் வருண தேவனிடத்தில் சென்றார், அந்த நாட்டின் குருவானவர். 

கானகத்தில் இருந்த வருணன் வருவது பகைவன் என்று எண்ணி, தனது பாசத்தை அவர் மீது வீசினான். உடனே குரு இறந்து போனார். அந்தக் கொலை பாவத்தால் பிசாசு வடிவம் ஒன்று அங்கு தோன்றியது. அது வருணனை இரண்டு கால்களோடு கைகளையும், கழுத்தோடு கூடும்படி கட்டி சமுத்திரத்தினுள் வீசி விட்டது. 

வருணன் அங்கே நெடுங்காலமாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டு விடுவிப்பார் இன்றி கட்டுண்டு கிடந்தான். வருணன் இல்லாத காரணத்தால் மண்ணுலகில் மழை வளம் இல்லாமல் மக்கள் பஞ்சத்தில் தவித்து வந்தனர். இதனால் விண்ணவர்களும், மண்ணுலகத்தினரும் சேர்ந்து சிவபெருமானை நோக்கி மனமுருக வேண்டித் துதித்தனர்.

அவர்கள் வேதனையை உணர்ந்து கொண்ட ஈசன், பல காலமாக சமுத்திரத்தில் கட்டுண்டு கிடக்கும் வருணனின் கட்டுக்களை அறுத்தெரிந்து அவனை விடுவித்தார். வருணன் எழுந்து சிவபெருமானை வணங்கி நின்றான். பின்னர் ஈசனிடம் வேண்டுகோள் ஒன்றையும் வைத்தான். 

‘ஐயனே! மாசி மகமாகிய இத்தினத்தில், நான் கட்டுண்டு துன்பப்பட்டு கிடந்த இந்தத் தலத்தில் இந்தத் துறையில் நீராடி இறைவனை வேண்டுபவர்களுக்கு பாசத்தை நீக்கி அவர்களுக்கு முக்தியைக் கொடுக்க வேண்டும். அன்றைய தினத்தில் ஐயனே! 

தாங்கள் இந்தத் துறையில் எழுந்தருளல் வேண்டும்’ என்று வேண்டி பிரார்த்தித்து வரங்களைப் பெற்றான். இந்தச் சரித்திரத்தை வியாக்கிர பாத முனிவர், இரணியவர்மச் சக்கரவர்த்திக்குக் கூறினார். அவன் மாசி மகத் தினம் வர, அன்றையப் பொழுதில் சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குக் கொடியேற்றி வைத்தான். 

அப்போது முனிவர்கள் முதலானவர்கள் வந்திருந்து விழாவைத் தரிசித்துக் ‘கனகசபைக்குத் தலைவரே! உங்களை எண்ணி வாழும் உயிர்கள் அனைத்துக்கும் அருள் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்கள். பின்னர் தேவர்கள் அனைவரும் சேர்ந்து, சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் வழியை அலங்காரம் செய்தார்கள். 

சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளினார். வருணன் இதனைக் கண்டு ஈசனை எதிர்கொண்டு வணங்கினான். அவனுடன் சேர்ந்து மற்ற தேவர்கள் அனைவரும் சிவ பெருமானை வணங்கி வழிபட்டனர். சிவபெருமான் வருணனது பாசத்தை நீக்கியருளிய துறையிலே திருமஞ்சனமாடி அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்து கனகசபையினுள்ளே எழுந்தருளினார். 

சிதம்பரத்தில் உள்ள பத்துத் தீர்த்தங்களுள் பாசமறுத்த துறையும் ஒன்று. சிதம்பரத்தில் இருந்து சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் இந்த துறை உள்ளது. மாசி மகம் தினத்தில் விரதம் இருந்து பாசமறுத்த துறையில் தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். 

இந்த தினத்தில் இறைவனை வழிபடுவதுடன் இத்துறையில் நீராடினால் பாவங்கள் விலகி ஓடும் என்பது நம்பிக்கை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகத்தில் வரும் புண்ணிய நாள் மாமாங்கம் எனப்படும். கும்பகோணத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

கொழும்பு: தங்கள் நாட்டு மக்களுக்கு, இந்தியா, விசா கெடுபிடியை அதிகரித்துள்ளதற்கு, இலங்கை அரசு, கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, ஈரான், ஈராக், சூடான்,சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, சுற்றுலா விசா வழங்குவதற்கான கெடுபிடிகளை, மத்திய அரசு அதிகரித்துள்ளது. மேற்கண்ட நாடுகளின் பட்டியலில், தங்கள் நாட்டின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதற்கு, இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து, இலங்கை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கெகிலிய ரம்புவெலா கூறியதாவது: இந்திய அரசின் விசா கெடு பிடி நடவடிக்கையில், இலங்கை பெயரை சேர்த்துள்ளது நியாயமில்லாதது. இதன் மூலம், இலங்கைக்கு, இந்தியா போதிய மதிப்பளிக்கவில்லை, என கருதுகிறேன். இதே போன்ற நடவடிக்கையை நாங்கள் எடுப்போமா என்பதை கூற முடியாது. எனினும், இந்த பிரச்னையை தூதரக அளவில் தீர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். 

பதிவு செய்த நாள்

14பிப்
2014 
12:01
புதுடில்லி: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், தண்ணீர் பிரச்னை. மின் பிரச்னை ஆகியன குறித்து பிரதமரிடம் எடுத்து கூறினேன். தமிழக மக்களின் நலனுக்காக கடிதம் மட்டும் எழுதினால் போதுமானது அல்ல. ஜெ., பிரதமரை, ஜனாதிபதியை சந்திக்க வேண்டியது தானே ! என்று டில்லியில் விஜயகாந்த் நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். நேற்று தாக்கலான பட்ஜெட் மக்கள் தூற்றும் பட்ஜெட். இது போற்றுகின்ற பட்ஜெட் அல்ல. இவ்வாறு விஜயகாந்த் கூறுகிறார்.

புதுடில்லி: அரியானா மாநிலம் குர்காவுனைச் சேர்ந்த காங்.எம்.பி. ராவ் இந்தர்ஜித்சிங், கடந்த ஆண்டு பார்லி. கூட்டத்தொடரின் போது, காங்.தலைவர் சோனியா மருமகன் ,ராபர் வத்ரா மீதான நிலமோசடி புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என பகிரஙகமாக அறிக்கை வெளியிட்டு பேசினார். இதனால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது.இந்நிலையில் காங்.கட்சியில் இருந்து விலகிய ராவ் இந்தர்ஜித்சிங், தனது ஆதரவாளர்களுடன் நேற்று , பா.ஜ.வில் முறைப்படி இணைந்தார். தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பா.ஜ.வின் தன்னை இணைத்துக்கொண்டார். ராவ் இந்தர்ஜித் கூறுகையில், 36ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தேன், இப்போது விலகிவிட்டேன். இந்த முடிவை நான் அவ்வளவு எளிதாக எடுக்கவில்லை. இப்போது பா.ஜ.வில் இணைந்தது எனக்கு நிம்மதியை அளிக்கிறது என்றார்.
Click Here