புதுடில்லி: அரியானா மாநிலம் குர்காவுனைச் சேர்ந்த காங்.எம்.பி. ராவ் இந்தர்ஜித்சிங், கடந்த ஆண்டு பார்லி. கூட்டத்தொடரின் போது, காங்.தலைவர் சோனியா மருமகன் ,ராபர் வத்ரா மீதான நிலமோசடி புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என பகிரஙகமாக அறிக்கை வெளியிட்டு பேசினார். இதனால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது.இந்நிலையில் காங்.கட்சியில் இருந்து விலகிய ராவ் இந்தர்ஜித்சிங், தனது ஆதரவாளர்களுடன் நேற்று , பா.ஜ.வில் முறைப்படி இணைந்தார். தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பா.ஜ.வின் தன்னை இணைத்துக்கொண்டார். ராவ் இந்தர்ஜித் கூறுகையில், 36ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தேன், இப்போது விலகிவிட்டேன். இந்த முடிவை நான் அவ்வளவு எளிதாக எடுக்கவில்லை. இப்போது பா.ஜ.வில் இணைந்தது எனக்கு நிம்மதியை அளிக்கிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக