கொழும்பு: தங்கள் நாட்டு மக்களுக்கு, இந்தியா, விசா கெடுபிடியை அதிகரித்துள்ளதற்கு, இலங்கை அரசு, கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, ஈரான், ஈராக், சூடான்,சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, சுற்றுலா விசா வழங்குவதற்கான கெடுபிடிகளை, மத்திய அரசு அதிகரித்துள்ளது. மேற்கண்ட நாடுகளின் பட்டியலில், தங்கள் நாட்டின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதற்கு, இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து, இலங்கை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கெகிலிய ரம்புவெலா கூறியதாவது: இந்திய அரசின் விசா கெடு பிடி நடவடிக்கையில், இலங்கை பெயரை சேர்த்துள்ளது நியாயமில்லாதது. இதன் மூலம், இலங்கைக்கு, இந்தியா போதிய மதிப்பளிக்கவில்லை, என கருதுகிறேன். இதே போன்ற நடவடிக்கையை நாங்கள் எடுப்போமா என்பதை கூற முடியாது. எனினும், இந்த பிரச்னையை தூதரக அளவில் தீர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக