ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

புதன், 6 ஏப்ரல், 2016

விஜயகாந்த் முடிவால் பா.ம.க.,வுக்கு பலன்: சொல்கிறார் அன்புமணி


கோவை: பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளது, பா.ம.க.,வுக்கு நல்ல பலனை கொடுக்கும். விஜயகாந்த் அறிவிப்பால், கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட குழப்பங்கள் போய்விட்டன. தனித்துப் போட்டி என்ற விஜயகாந்த் முடிவை, இறுதி முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. தனித்துப் போட்டி என அறிவித்துவிட்டு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என பா.ம.க., ஏற்கனவே தெளிவாக அறிவித்து விட்டது. கூட்டணிக்காக மற்ற கட்சிகளை தேடிப்போக மாட்டோம். இந்த முறை மக்கள், பா.ம.க.,வுக்கு ஆதரவு அளிப்பார்கள்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன. கருணாநிதி தலைமையில், தி.மு.க., மூழ்கும் கப்பலாக மாறிவிட்டது. இதனால், அக்கட்சி லோக்சபா தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது எனக் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக