லக்னோ: நாட்டின் மிக பெரிய மாநிலமான உத்தரபிரசேத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என அதிகப்பட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவருக்கான ஆதரவு மாநில கட்சிகள் மற்றும் ராகுலை விட பல சதவீதம் உயர்ந்திருப்பதாக இந்தியா டூ டே எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் உ .பி., மாநில ஓட்டுக்கள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. இங்கு 80 எம்.பி.,க்கள் தொகுதி உள்ளது. மொத்தம் 534 ல் இங்கிருந்து அதிகம் எத்தனை எம்.பி.,க்கள் தங்களின் கட்சிக்கு கிடைக்கும் என கணக்கு போட்டு வருகிறது. பிரதமர் கனவில் இருக்கும் முலாயம்சிங் எப்படியாவது அதிக தொகுதிகளை பிடிக்க கங்கணம் கட்டி வருகிறது.
இந்நிலையில் இந்தியா டூ டே சி வோட்டர் எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் ; கூட்டணி இல்லாமல் தனித்து நின்றால் பா.ஜ.,வுக்கு அதிகப்பட்சமாக 30 தொகுதிகளை பிடிக்க முடியும். காங்கிரசுக்கு 4 தொகுதிகளே கிடைக்கும். அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் முலாயம்சிங் கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் பா.ஜ.,வுக்கு கிடைக்கக்கூடிய தொகுதிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு. ஆனால் இது சாத்தியமில்லை. காரணம் பிரதமர் கனவில் இருக்கும் முலாயம்சிங் 3 வது அணி அமைப்போம் என்று பேசி வருகிறார்.
மேலும் தற்போது யார் பிரதமர் ஆக வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு , மோடிக்கு 48 சதவீத்தினர் ஆதரவும், ராகுலுக்கு 15 சதவீதத்தினரும், ஆம் ஆத்மியின் கெஜ்ரிவாலுக்கு 21 சதவீதத்தினரும், முலாயம்சிங்கிற்கு 19 சதவீதத்தினரும், மாயாவதிக்கு 12 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மாநிலத்தில் யார் முதல்வராக விருப்பம் என்ற கேள்வி கேட்டதில் , அதிகப்பட்சமாக மாயாவதிக்கு 28 சதவீதம் பேரும், , அகிலேசுக்கு 12 சதவீதத்தினரும், முலாயமுக்கு 13 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தட்டுப்பாடு இங்கு பெரும் பிரச்சனையாக இருப்பதால் மாநில வளர்ச்சியில் 40 சதவீதத்தினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது போல் சட்டம் ஒழுங்கு, சாலை அமைப்புகள் போதியவை அதிருப்தி அளிப்பதாவும் கூறியுள்ளனர்.
குறிப்பாக இந்த மாநிலம் முழுவதும் மோடிக்கு ஒரு குறிப்பிட்ட செல்வாக்கு வளர்ந்திருப்பதாகவும் இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக