ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

📚📓📚📓📚📓📚📓📚📓📚

*வாழ்க்கை வரலாறுகள்*
*(தமிழ் PDF மின்நூல்கள்)📕*


1. முஹம்மது நபி ⬇
http://fahim.link/ProphetMuhammad

2. சே குவேரா ⬇
http://fahim.link/CheGuwera

3. தாமஸ் ஆல்வா எடிசன் ⬇
http://fahim.link/ThomasEdison

4. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ⬇
http://fahim.link/AlbertEinstein

5. பிரபாகரன் ⬇
http://fahim.link/Prabakaran

6. மாவீரன் அலெக்சாண்டர் ⬇
http://fahim.link/Alexander

7. மருதநாயகம் ⬇
http://fahim.link/Marudhanayagam

8. ராமானுஜம் ⬇
http://fahim.link/Ramanujam

9. சுனிதா வில்லியம்ஸ் ⬇
http://fahim.link/SunithaWilliams

10. சதாம் ஹுசைன் ⬇
http://fahim.link/SadhamHussain

11. அறிஞர் அண்ணா ⬇
http://fahim.link/ArignarAnna

12. பெரியார் ⬇
http://fahim.link/Periyar

13. திப்பு சுல்தான் ⬇
http://fahim.link/ThippuSulthan

14. நெப்போலியன் ⬇
http://fahim.link/Nepolien

15. கேனல் கடாபி ⬇
http://fahim.link/Gadafi

16. ஹிட்லர் ⬇
http://fahim.link/Hitler

17. காமராஜர் ⬇
http://fahim.link/Kamarajar

18. கார்ல் மாக்ஸ் ⬇
http://fahim.link/KarlMarks

19. பில் கேட்ஸ் ⬇
http://fahim.link/BillGates

20. பாரதியார் ⬇
http://fahim.link/Bharathiyar

21. பிடல் காஸ்ட்ரோ ⬇
http://fahim.link/FidalCastro

22. ஹெலன் கெல்லர் ⬇
http://fahim.link/HelanKeller

வியாழன், 30 மார்ச், 2017

தலாக் விவகாரம்

வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, மே 11 முதல் விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இஸ்லாமிய சமுதாயத்தில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. பலதார திருமணத்தை அனுமதிக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளையும் இணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், மத்திய அரசு உள்ளிட்ட தரப்புகள் உச்சநீதிமன்றத்தில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளன. இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், முத்தலாக் முறைக்கு எதிராக மத்திய அரசு கருத்து தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், முத்தலாக் விவகாரம் தொடர்பான வழக்குகள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹெர், என்.வி.ரமணா மற்றும் டிவி.சந்திரசௌத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. முத்தலாக் மற்றும் பலதார மணம் போன்றவை அரசியல் சாசன ரீதியாக அனுமதிக்கப்படக் கூடியதா என்பதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முடிவுசெய்யும் என்று தெரிவித்தனர்.

கோடைகால விடுமுறைக்குப் பின்னர் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை மே 11 முதல் நடக்கும் என்று தெரிவித்தனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி விடுமுறை தினங்களில் கூட விசாரணை நடத்த தயாராக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரிக்க இருக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹெர் தலைமையேற்பார் என்று தெரிகிறது.

கேரளத்தில் BJP

கேரளத்தில் நடந்த பஞ்சாயத்து வார்டு தேர்தல் ஒன்றில் கம்யூனிஸ்டை மூன்றாம் இடத்திற்கு தள்ளி வெற்றிக் கொடி நாட்டியது பாஜக.

#கோழிக்கோடு_பாலிசேரி_பஞ்சாயத்து.

செல்வராகவனின் அடுத்த படம்

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் 2-ம் பாகம் தயாராக உள்ளதாக செல்வராகவன் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’ ஆகிய படங்கள் அவருடைய திறமையை வெளிப்படுத்திய படங்கள். அதேபோல், ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்த போதிலும், அந்த படங்கள் அனைவரும் ரசிக்கும்படியாகவும், அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற படமாக அமைந்தது.

‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன், தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சிம்புவை வைத்து இவர் இயக்கிய ‘கான்’ படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இவருடைய இயக்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகத்திற்கான கதையை செல்வராகவன் எழுதி முடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. படங்கள் இயக்காமல் இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்த இருந்த சமயத்தில் இப்படத்தின் கதைகளை அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இப்போதைக்கு இந்த இரண்டு படங்களையும் இயக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவருக்கு வேறு பணிகள் இருப்பதால் இந்த இரண்டு படங்களையும் இயக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். இருந்தாலும் எதிர்காலத்தில் இப்படங்களின் இரண்டாம் பாகம் வெளிவரும் என அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

MEMS NEWS

காலத்துக்கு ஏற்றாற்போல வேலை வாய்ப்புகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நடப்பு நிகழ்வுகள், அரசியல் அதிரடிகள், காரசார விவாதங்கள் குறித்து போட்டோ/ வீடியோ மீம்களாக உருமாற்றிக் கருத்துச் சொல்லும் நபர்கள், ஐடி பணியாளர்களுக்கு இணையாகச் சம்பாதிக்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

இந்த மாற்றம் குறித்து 'தி இந்து'-விடம் (ஆங்கிலம்) பேசினார் விளம்பரப் படங்கள், சினிமா படங்கள், நிகழ்ச்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் நிறுவனமான 'த சைட் மீடியா' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லோகேஷ் ஜெய்.

''மீம் பொறியாளர் என்ற பதவியை நாங்கள் முதன்முதலாக அறிமுகம் செய்தோம். நம்மிடையே இயந்திரவியல், கட்டிடவியல், மின்னியல், மின்னணுவியல், ஐடி என ஏராளமான துறை பொறியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் தங்களின் கருத்துகளையும், யோசனைகளையும், பார்வையையும் மீம் வழியாகச் சமூகத்துக்குத் தெரிவிக்கும் மீம் பொறியாளர்கள் இல்லை. அதை உருவாக்க ஆசைப்பட்டேன்.

மீம் பொறியாளர்கள் வேலைக்குத் தேவை என்று சமூக ஊடகங்களிலேயே மீம் ஒன்றைப் பதிவு செய்தோம். தமிழகம் முழுக்கவிருந்து சுமார் 100 ரெஸ்யூம்கள் குவிந்தன.

அதில் இருந்து படைப்பாற்றல், செய்திகள் சார்ந்து இயங்கும் ஆர்வம், உடனடியாக, வித்தியாசமாகச் சிந்திப்பது ஆகிய திறமைகளை அடிப்படையாகக் கொண்டு மீம் பொறியாளர்களைத் தேர்ந்தெடுத்தோம்.

தற்போது அரசியல், திரை உலகம், மால்கள், உணவகங்கள், விமான போக்குவரத்து என ஏகப்பட்ட இடங்களில் மீம்களின் தேவை எக்கச்சக்கமாக இருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 7 - 10 மீம்கள் உருவாக்கப்படுகின்றன. பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் நடக்கும் நாட்களில் இந்த எண்ணிக்கை 500-ஐத் தொடும்'' என்றார் லோகேஷ்.

தயாரிப்புகளை விளம்பரப்படுத்துதல்

இதுகுறித்து சமூக ஊடக விளம்பர இயக்குநர் ஒருவர் பேசும்போது, ''பெரிய பிராண்டுகள் கூடத் தங்களின் தயாரிப்புகளை மீம்கள் மூலமாக விளம்பரப்படுத்தித் தரச்சொல்லி எங்களை அணுகுகின்றன. இதற்கு மீம் பொறியாளர்களின் உதவி தேவைப்படுகிறது'' என்கிறார்.

'மீம் மீடியா மார்க்கெட்டிங்' என்று மீம்கள் சார்ந்து இயங்க ஒரு தனிப்பிரிவை வைத்திருக்கிறார் ராம்குமார். நம்மிடம் பேசும்போது, ''சமூக ஊடகங்களில் இயங்குபவர்களின் சராசரி வயது 30-க்கும் குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கு பெரிய பாராக்களில் ஒரு செய்தியைச் சொல்வதை விட, மீம் வழியாகச் சொல்வது எளிதில் சென்றடைகிறது.

இதனாலேயே சமூக ஊடகங்களில் உண்மையான படைப்பாற்றலுடன் இயங்கும் நபர்களைத் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு வேலை வழங்குகிறோம்'' என்கிறார்.

அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன?

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளின் சமூக ஊடக மேலாளர்கள் மீம்களுக்காகவே பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளனர். இவர்களின் வேலையே ஒரு கட்சி தன் கருத்தைத் தெரிவிக்கும் போது, எதிர்க்கட்சி அதற்கு புதுமையான மீம்கள் மூலம் பதில் தாக்குதல் செய்வதுதான். அரசியல் வட்டாரத்தில் அவர்கள் 'மீம் பாய்ஸ்' என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு அரசியல் பற்றிய அறிவோடு, திரையுலகம் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நகைச்சுவை உணர்வு மிகுதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மீம் பொறியாளர்களின் சம்பளம் குறித்து அதிமுகவின் முன்னாள் தொழில்நுட்பத்துறை செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கூறும்போது, ''ஆரம்ப கட்டத்தில் ரூ.5,000 முதல் ரூ.18 வரை மீம் பொறியாளர்கள் சம்பாதிக்கின்றனர். அதுவே முக்கியமாக கட்டத்தில் ஒரு மீமுக்கு ரூ.25,000 வரை சென்ற நிகழ்வும் இருக்கிறது'' என்கிறார்.